Tuesday, September 2, 2014

அடுத்து என்ன செய்யலாம்

Posted by Saruban On Tuesday, September 02, 2014


வணக்கம் நண்பர்களே,
முந்தைய பதிவுடன் மனதை டியூன் அப் செய்வது பற்றிய தொடர் முடிவடைந்தது என்று நினைச்சுடாதிங்க.
ஒரு சில பதிவுகளில் மனம் எனும் மாபெரும் சக்தியை விளக்கி விட முடியாது,  இருந்தாலும் என் சிற்றறிவுக்கு எட்டிய வரை விளக்க முற்பட்டிருக்கிறேன்.

முதன் முதலில் பயிற்சிக்குட்படுத்தப்படும் குதிரை எப்படி அடங்காமல் அடம்பிடித்து திசை மாறி செல்கிறதோ அது போலவே மனித மனமும் முதலில் முரண்டு பிடிக்கும்.

குதிரை திசை மாறுகின்றது என்பதற்காக அதை அப்படியே விட்டுச் செல்கிறான குதிரையோட்டி.
இல்லையே மீண்டும் மீண்டும் சரியான திசைக்கு கொண்டு வருவதில்லையா.
பெரும் விலை மதிப்புள்ள குதிரை என்பதால் தானே இவ்வளவு கவனம், அதன் பயன் பெரிது என்பதால் தானே இவ்வளவு கரிசனம் .
குதிரைக்கே இவ்வளவு பாடுபட வேண்டுமென்றால் விலை மதிப்பற்ற மனித மனதை நம் வழிக்கு கொண்டுவர எவ்வளவு பாடுபட வேண்டும், எவ்வளவு பொறுமை வேண்டுமென எண்ணிப்பாருங்கள்.

ஆனால் இவையனைத்திற்கும் கிடைக்கும் பயன் பற்றி கொஞ்சம் சிந்தியுங்கள்.  உங்கள் வாழ்க்கையை உயர்த்தப் போகும் செயல்பாடுகளுக்காக நீங்கள் எவ்வளவு கஷ்டம் வந்தாலும் தாங்கிக் கொள்ள தயாராக இருப்பீங்க என்று எனக்குத் தெரியும்.

இலக்கை நிர்ணயித்து எறியப்படும் அம்பை விடவும் வேகமான மனோ சக்தியையுடைய நாம் எம் இலக்கை அடைவது உறுதி.
உங்களைத் தவிர உங்களை யாராலும் வீழ்த்த முடியாது.
பின் என்ன கவலை.

(குசும்புக்காரன்: அதான் அண்ணணே சொல்லிட்டாரே,அப்புறமேன் இந்த ப்ளொக்க (blog) பாத்துட்டிருக்கீங்க.  போங்க, இலக்க நிர்ணயிங்க. அர்ச்சீவ் பன்னுங்க.
ஏதோ இன்னைக்குத்தான் பிரயோசனமா சொல்லிருக்க.)

இதெல்லாம் சரி.  அடுத்ததா என்ன Topic ல ஆராய்ச்சிய தொடங்கலாம்னு திங் பன்னிட்டிருக்கன். பதிவின் தலைப்பே அதானேப்பா.
ம்....
பார்ப்பம் என்ன தோனுதின்னு.

அடுத்த வருகைக்காகக காத்துக்கிட்டுருக்கேன்.
நான் உங்களதான்பா சொல்றேன். வருவீங்க தானே.

0 comments:

Post a Comment

உங்கள் பொன்னான கருத்தை பதிவிட்டு தளத்தின் வளர்ச்சிக்கு உதவுங்கள்.